சென்னை, ஏப்.15- கடந்த ஏப்ரல் 6 அன்று சென்னையில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணியாட்கள் சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர், உரிய ஆவணங்க ளின்றி 4 கோடி ரூபாய் பணத்து டன் பிடிபட்டனர். இதில் ரூ.1 கோடி பாஜக தொழில்துறை பிரிவு தலைவர் கோவர்த்தனுக்கு சொந்தமான கொரியன் ரெஸ்டாரண்ட் அலு வலகத்தில் இருந்து பெறப்பட் டது என்று கூறப்பட்ட நிலையில், கொரியன் உணவகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளரும், பாஜக தொழில்துறை பிரிவு தலைவருமான கோவர்த்தன னுக்கு தாம்பரம் போலீசார் சம் மன் அனுப்பினர். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நண்பரும்- பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளருமான மகாவீர் என்பவரின் வீடுகள் மற்றும் ராஜேஷ் எலெக்ட்ரானிக்ஸ் கடைகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், “ரூ. 4 கோடி பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று நயி னார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில், ரயிலில் பிடிபட்ட ரூ. 4 கோடி பணம் நயினார் நாகேந்தி ரனுக்கு சொந்தமானதுதான் என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பிடிபட்ட சதீஷ், பாஜக உறுப்பினர் தான் என்ப தற்கான அடையாள அட்டை மற்றும் பாஜக வேட்பாளர் நயி னார் நாகேந்திரன் எம்எல்ஏ-வின் அடையாள அட்டை ஆகிய வையும் பறிமுதல் செய்யப்பட்டி ருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது. இவற்றின் அடிப்படையில் திருநெல்வேலி பாஜக வேட்பா ளர் நயினார் நாகேந்திரன் ‘ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றும் தாம்பரம் போலீசார் தற்போது சம்மன் அனுப்பியுள்ளனர்.
முன்னதாக “தனக்கு எந்த சம்மனும் வரவில்லை” என நயி னார் நாகேந்திரன் தெரிவித்தி ருந்த நிலையில், காவல்துறை சம்மன் அனுப்பியிருப்பது தற் போது உறுதியாகி உள்ளது. ஏற் கெனவே வருமான வரித்துறை யின் கவனத்திற்கும் இந்த விவ காரம் கொண்டு செல்லப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.