tamilnadu

50 லட்சம் கையெழுத்துக்களை கடந்தது நீட் விலக்கு இயக்கம்

சென்னை,டிச.2- நீட் விலக்கு வலியுறுத்தி  பெறப்படும் கையொப் பங்கள் இதுவரை 50 லட்சத் தைத் தாண்டி உள்ளதாக  அமைச்சரும் திமுக இளை ஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  எக்ஸ் தளத்தில் வெளி யிட்ட பதிவில் கூறியிருப்ப தாவது:-

நீட் விலக்கு வலியுறுத்தி, திமுக இளைஞரணி, மாண வரணி, மருத்துவர் அணி சார்பில் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 50 லட்சம் கையொப்பங்களைப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அதிகரித்து இப்போது 55 லட்சத்தை தாண்டியுள்ளது.

இணையவழியில் 40 லட்சம், அஞ்சல் அட்டை வழியாக 15 லட்சம் என 55 லட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து, கையொப் பமிட்டு மக்கள் தங்களது நீட் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். நீட் எதிர்ப்புணர்வு தமிழ்நாட்டில் பேரலையாய் திரண்டு இருக்கிறது என்பதற்கான சான்று இதுவாகும்.

குடியரசுத் தலைவர் ஒற்றைக் கையொப்பத்தைப் பெறுவதற்கு நாம் பெறும் இத்தனை லட்சம் கையொப்பங்கள் நீட் ஒழிப்பு வரலாற்றில் என்றும்  நிலைத்திருக்கும். தகுதி, தரம் என்று ஏமாற்றி நீட்டைத் திணிப்பவர்கள், அதற்கெதிரான ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.