அனிதா நினைவு தினமான செப்டம்பர் 1 ஆம் தேதியை பெண்கல்வி பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னையில் பேரணி நடைபெற்றது. மாணவிகள் உபகுழு கன்வீனர் காவியா தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், தலைவர் ஏ.டி.கண்ணன், துணைத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி, மத்தியக்குழு உறுப்பினர் ஜான்சிராணி, மாநிலக்குழு உறுப்பினர் பிருந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.