செங்கல்பட்டு ராமகிருஷ்ணா பள்ளி விளையாட்டு போட்டியின்போது ஜோதி எடுத்தது சென்ற தீ விபத்தில் பலியான விக்னேஷ் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிட வலியுறுத்தியும் மாணவன் இறப்பிற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் சங்க மாவட்டத் தலைவர் செந்தமிழன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாவட்டச் செயலாளர் தமிழ் பாரதி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ம.பா.நந்தன், மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன், மாதர் சங்க மாநிலச் செயலாளர் வா. பிரமிளா உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.