வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடலை ஒட்டியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் பரவலாக மழை பெய்யும்.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வுமையம் மஞ்சள் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் 24 மணி நேரத்தில் தமிழகம் கேரளத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழையும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.