சென்னை, ஏப்.27- கோடைக் காலத்தில் பொதுமக் களுக்கு தங்கு தடையின்றி குடி நீர் விநியோகம் செய்வது தொடர் பான ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத் தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை (ஏப்.27) அன்று நடைபெற்றது.
அப்போது, “தமிழ்நாட்டில் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் 22 மாவட்டங்களில் ஏற்கெ னவே அறிவிக்கப்பட்ட ரூ. 150 கோடி யில் குடிநீர் வழங்கல் பணிகள் துரி தமாக மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.
மேலும், இந்தக் கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:
கோடை காலம் இரண்டு வித மான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதி கரிப்பு. வெப்ப அலை பிரச்சனை குறித்து இரண்டு நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆய்வு செய் தேன். விரிவான அறிக்கையை பொது மக்களுக்கு வெளியிட்டேன்.
குடிநீர் பற்றாக்குறை..
கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில், கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போதிலும், மாநி லத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்கக் கூடிய மேற்கு மாவட்டங்களில் குறைந்த அளவு மழையே பெய் தது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை சூழல் குறித்து, தலை மைச் செயலாளர், பிற துறைச் செய லாளர்கள் விளக்கினர்.
கடினமான சூழல்...
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்தில், முதல் ஓரிரு மாதங்களில் மழை அளவு எதிர்பார்ப்பதை விட குறைவாக இருக்கக் கூடும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, தற்போது அணை களில் உள்ள நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர்த் தேவை யை நிறைவு செய்ய வேண்டிய கடி னமான சூழ்நிலையில் நாம் உள் ளோம்.
இதனைக் கருத்தில் கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச் சனை நிலவக்கூடிய அனைத்து பகு திகளுக்கும் சென்று, பிரச்சனை களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
லாரிகள் மூலம் குடிநீர்
தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட் டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக் குறை உள்ள மாவட்டங்கள் என்ற நிலையில், ஏற்கெனவே அறிவிக் கப்பட்டபடி மாநில பேரிடர் நிவா ரண நிதியிலிருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணி களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மேற் கொள்ள வேண்டும் என்று வரு வாய் நிர்வாக ஆணையரைக் கேட்டுக் கொள்கிறேன்.
தடையில்லா மின்சாரம்...
கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற் றும் நீரேற்று நிலையங்கள் தடை யின்றி தொடர்ந்து செயல்படுத்து வதற்கு, சீரான- தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்த கைய திட்டப் பணிகளுக்கு மின்சா ரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மின் வாரியத்தின் தலைவரை கேட்டுக் கொள்கி றேன்.
ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன் பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு வருகின்றன. இவற்றுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறு வது உறுதி செய்யப்பட வேண் டும்.ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களை இப்பணிகளில் முழுமையாக ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் இயக்கு நரும் ஈடுபடுத்த வேண்டும்.
சுணக்கமின்றி பணிகள்
வாக்குப்பதிவு முடிந்தும், தேர் தல் நடத்தை விதிகள் நடைமுறை யில் இருக்க கூடிய நிலையில், இந்த முக்கியப் பணிகள் எந்தவித மான சுணக்கம் ஏற்பட்டுவிடாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங் களையும் கண்காணித்து வருமாறு தலைமைச் செயலாளரை கேட்டுக்கொள்கிறேன்.
கோடைக் காலத்தில் தண்ணீ ரின் தேவை அதிகம். ஆனால், கிடைப்பது குறைவு. இதை மனதில் வைத்து மக்களுக்கு அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும் என கேட்டுக்கொள் கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, இ. பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சந்தீப் சக்சேனா, ராஜேஷ் லக்கானி, தா. கார்த்திகேயன், வி. தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.