tamilnadu

img

தற்காலிக சாலையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சீரமைப்பு

பீர்க்கன்காரணை பேருராட்சி, தேவநேசன் நகர் ஏரிக்கரை சாலையில் கால்வாய் அமைக்க ஏதுவாக  பொதுப்பணித் துறை பாலம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளது.  இதனால் தினசரி சுமார் 15 ஆயிரம் பேர் பயன்படுத்தும் ஏரிக்கரை சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக சாலையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாம்பரம் பகுதி தேவநேசன் நகர் மற்றும் இமானுவேல் தெரு கிளை நிர்வாகிகள் அன்பு, அனந்தகிருஷ்ணன், அன்பழகன், துரை வேலு, கமல், தனுஷ் கிருஷ்ணா உள்ளிட்டோர் இணைந்து  சீரமைத்தனர்.