tamilnadu

img

இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க சென்னையில் வழக்கறிஞர்கள் பிரச்சாரம்

சென்னை, ஏப். 13 - அரசியலமைப்பு சட்டத்தை, ஜனநாயகத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வழக்கறிஞர்கள் அறை கூவல் விடுத்துள்ளனர். இந்திய அரசியலமைப்பு  சட்டம், ஜனநாயகம், சமத்துவம், சமூகநீதி, வேற்றுமையில் ஒற்றுமை, பன்முகத்தன்மை ஆகியவற்றை பாஜக அரசு சிதைத்து வருகிறது. மாநில அரசுகளின் அதிகாரங்களை பறித்து, பாசிச பாணியில் செயல்படுகிறது. ஊழலை சட்டப்பூர்வமாக்கி ஜனநாயக மாண்புகளை சிதைத்து வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும். இந்திய தண்டனை சட்டம்  (ஐபிசி), குற்றவியல் நடை முறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சிய சட்டம் (ஐஇஏ) ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் உச்சநீதி மன்ற கிளையை நிறுவ  வேண்டும், உயர்நீதிமன்றத் தில் தமிழை வழக்காடு  மொழியாக மாற்ற வேண்டும். சாதிவாரி கணக் கெடுப்பை நடத்த வேண்டும்  என்பன போன்ற வழக் கறிஞர்களின் கோரிக்கை களை இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் வாக்குறுதி யாக அறிவித்துள்ளது. எனவே, பாஜக அணியை யும், அதற்கு துணை போகும் அதிமுக அணியை வீழ்த்தவும், இந்தியா கூட்டணியை ஆதரித்தும் சனிக்கிழமைன்று (ஏப்.13) நொச்சிக்குப்பத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை வழக்கறிஞர்கள் நடத்தினர்.  

அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கம், சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம், சனநாயகம் மற்றும் சமூக  நலன்களுக்கான வழக்கறி ஞர் மையம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து இந்த பிரச்சாரத்தை நடத்தின. பிரச்சாரத்தில் செம்படை கலைக்குழுவின் ‘கைப் புள்ள மன்னனும், டம்மி பீசு  மந்திரியும்’ எனும் நாடகம் நிகழ்த்தப்பட்டது.

தென்சென்னை தொகுதி வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து நடைபெற்ற   பிரச்சாரத்தை சனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறி ஞர் மைய தலைவர்  வழக்கறிஞர் விஜயகுமார்  தொடங்கி வைத்தார். அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார், சென்னை மாவட்ட தலைவர் பாலசுப் பிரமணியம், செயலாளர் பா.சீனிவாசன், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க தலை வர் பாரதி உள்ளிட்டோர் பேசினர்.