சென்னை,நவ.27- வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வரு கிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில், புறநகர் பகுதி யில் பலத்த மழை கொட்டியது. செம்ப ரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் செம்பரம் பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 532 கன அடியாக உயர்ந்தது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில் தற்போது 3170 மி.கன அடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத் தக்கது. 162 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.மேலும், தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதி காரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதே போல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம் ஏரி களுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.