tamilnadu

img

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வருமானவரி ஊழியர்கள் போராட்டம்

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (செப்.5) நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வருமானவரி ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு சென்னை பிரிவு தலைவர் பி.மீராபாய் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் எம்.எஸ். வெங்கடேசன், நிர்வாகிகள் எஸ். சுந்தரமூர்த்தி, என். வைத்தியநாதன் உள்ளிட்டோர் பேசினர்.