விஜயரங்கன்-கனிமொழி இல்லம் திறப்பு விழா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதி, கோயம்பேடு மார்க்கெட் கிளை உறுப்பினர் விஜயரங்கன்-கனிமொழி இல்லம் திறப்பு விழா ஞாயிறன்று (ஏப்.21) நெற்குன்றத்தில் நடைபெற்றது. இல்லத்தை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), தென்சென்னை மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர்கள் இ.ரவி (விருகம்பாக்கம்), வி.தாமஸ் (மதுரவாயல்), அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
காஞ்சிபுரம் டி.ஸ்ரீதர் இல்லத் திருமணம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் நகரச் செயலாளர் டி.ஸ்ரீதரின் மகன் எஸ்.முத்தமிழ்செல்வன் - எஸ்.திருமகள் ஆகியோரது திருமணம் ஞாயிறன்று (ஏப்.21) காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி.எழிலரசன், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் (அதிமுக), காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி, பாசறை செல்வராஜ் (விசிக), சிபிஎம் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இ.சங்கர், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக நயினார், ராஜசேகர், இ.முத்துக்குமார், மாவட்ட செயலாளர்கள் சி.சங்கர் (காஞ்சிபுரம்), கோ.மாதவன் (கடலூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை
சென்னை,ஏப்,22- இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனி யார் சுயநிதி பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் 1-ஆம் வகு ப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
இத்திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேர்ப வர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். இந்த நிலையில், வரும் (2024-25) கல்வி ஆண்டிற் கான இணையதள விண்ணப்ப பதிவு திங்க ளன்று (ஏப். 22) தொடங்கி மே 20-ம் தேதி வரை நடை பெற உள்ளது.