tamilnadu

img

சிங்கப்பெருமாள் கோவில் மேம்பாலம் திறப்பு

ர்பார்த்து வந்த ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் பாலத்தின் ஒரு பகுதி பணிகள் நிறை வடைந்து புதனன்று (பிப்.19)திறக்கப்பட்டது. சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலம் சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்றான செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வளர்ந்து வரும் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக சிங்கப்பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த பகுதியை சுற்றி இருக்கும் 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர்

சிங்கப்பெருமாள் கோவில் வந்து தான் செங்கல்பட்டு,

தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக சிங்கப்பெருமாள் கோவில் திருபெரும்புதூர் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் வழியாக நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து வருகிறது. குறிப்பாக திருபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் இப்பகுதி போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக காணப்படுகிறது. இந்த நிலையில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் 10 ஆண்டு களுக்கும் மேலாக பல்வேறு சிக்கல்களால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சி யில் இக்காலத்திற்கு புதிதாக டெண்டர் விடப்பட்டு சுமார் 138.27 கோடி மதிப்பீட்டில் நவம்பரில்  பாலப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து 30 மாதங்களுக்குள் இப்பணி களை முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணி களை முடிக்க முடியாமல் போனது. சென்னை மற்றும் தென் தமிழகத்தை இணைக்கும் முக்கிய சாலையான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை எனப்படும் ஜிஎஸ்டி சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சிங்கப்பெருமாள் கோவில் சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் இந்த சிங்கப்பெருமாள் கோவில் மேம்பால திட்டம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதனன்று அமைச்சர்கள் எ.வ. வேலு மற்றும் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த பாலத்தை திறந்து வைத்தனர். இவ்விழாவில், தாம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.இராஜா,  செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி உறுப்பி னர் ம.வரலெட்சுமி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச்செயலாளர் டாக்டர் இரா.செல்வ ராஜ், செங்கல்பட்டுமாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். இந்த பாலம் திறக்கப்பட்டதால் இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் 60 விழுக்காட்டிற்கு மேல் குறை யும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரி விக்கின்றனர்.