tamilnadu

img

போதிய பயிற்சி இல்லாதவர்களை கொண்டு ரத்தமாதிரி எடுப்பதை தவிர்க்க வேண்டுகோள்

சென்னை, மார்ச் 26- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் லேப்டெக்னீயன்களை கொண்டு வைரஸ்  சோதனை மாதிரி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இம்மருத்துவமனையில் (ஜிஎச்) கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 7 நோயாளி களில் காஞ்சிபுரம் மற்றும் டெல்லியை சேர்ந்த  இரண்டு நோயாளிகள் குணம் அடைந்தது வீடுதிரும்பியுள்ளனர். தற்போது ஒரு பெண்  உட்பட 4 ஆண்நோயாளிகள் கொரானா  வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நோயாளிகளின் எண்  ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலி யர்கள், மருத்துவம் சாராதபணியாளர்கள் இல்லை என கூறப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஓரளவு காலிப்பணியிடங்கள் நிரப் பட்டுள்ளன. ஆனால் லேப்டெக்னிசன் உள்ளிட்ட மருத்துவம் சாராதபணிகளுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் அது முழுமையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்  பட்டு ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்து வமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி களுக்கு சோதனை மாதிரிகளை மத்திய தொற்று நோய் பராமரிப்பு (சிடிசி) மருத்துவ மனை வழிகாட்டுதல் படி பயிற்சி பெற்ற  மருத்துவர்கள் மூலமாகத்தான் எடுத்து  ஆய்வு செய்யவேண்டும் ஆனால்  ஆய்வ கத்தில் பணியாற்றும் லேப்டெக்னீசன்கள் சோதனை மாதிரிகளை எடுக்கவேண்டும் என  வாய் மொழியாக பணிக்கப்பட்டு வேலை வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆய்வக நுட்பனர்களின் பட்டய பயிற்சி யில் – உடற்கூறு இயல் பாடப்பிரிவு இல்லாத நிலையில், உடற்கூறு பற்றி ஏதும்  அறியாத தொழிற்நுட்ப ஊழியரை கொரோனா வைரஸ் சோதனை மாதிரிகளை எடுக்கப்பணித்துள்ள நடைமுறையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உலக  சுகாதார மையம் மற்றும் மத்திய தொற்று நோய் மருத்துவமனை வழிகாட்டு நடை முறைகளுக்கு முற்றிலும் மாறான தவறான முன்உதாரணமாகும். ஆய்வக நுட்பனர்களின் பட்டய பயிற்சி யில் – உடற்கூறு இயல் பாடப்பிரிவு இல்லாத  நிலையில், உடற்கூறு பற்றி ஏதும் அறியாத தொழிற்நுட்ப ஊழியரை வற்புறுத்தி பணிசெய்யச்சொல்வது என்ன நியாயம் என கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவர்க ளுக்கு மத்திய அரசு வழங்கும் ரிஸ்க் அல வன்ஸ் வழங்கப்படுவதில்லை, அபாயகர மான பணியில் ஈடுபடும் அவர்களை  அவசர கால பிரிவு ஊழியர்கள் என அறிவிக்கப்பட வும் இல்லை, போர்கால அடிப்படையில் 24 மணிநேரமும் தனது உழைப்பை தரும் லேப்டெக்னிசன்களின் கோரிக்கைகளை அரசு செவிசாய்க்கமறுக்கிறது.    மாநிலத்  தலைநகரில் உள்ள தலைமை மருத்துவ மனை வழிகாட்டு நடைமுறைகளுக்கு முற்றி லும் மாறான தவறான முன்உதாரணமாக இருப்பதாக ஊழியர்கள் கருத்து தெரி வித்துள்ளனர். மேலும் மத்திய அரசால் (health professionl) என  வரையறை செய்யப்  பட்ட ஆய்வக நுட்பனரை , நோய்காண் ஆய்வ கங்களில் முழுவதுமாக பயன்படுத்திடு மாறும், சோதனை மாதிரிகளை எடுத்திட மருத்துவம் மற்றும் உடற்கூறுஇயல் பயின்ற  மருத்துவர்களை பயன்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.