சென்னை,செப். 8- சென்னை கேரள சமாஜத்தில் மலையாளம் மற்றும் தமிழ் மக்களை கவரும் வகையில் ஓணம் சந்தை அமைக்கப்பட்டு ள்ளது. கேரள மக்கள் கொண்டா டும் ஒரு பாரம்பரிய சிறப்பு வாய்ந்த திருவிழாவாக ஓணம் கொண்டாடப்படு கிறது. சாதி, மத வேறு பாடின்றி அனைத்து மலை யாளிகளாலும் கொண்டாட ப்படும் இப்பண்டிகை கேரளாவின் அறுவடை திரு நாள் என அழைக்கப்படு கிறது. 10 நாட்கள் கொண்டாட ப்படும் இந்த திருவிழாவை யொட்டி சென்னை கேரளசமாஜத்திலும் செப் 6 முதல் 10 வரை ஓணம் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. ஓணம் சந்தையை மெட்ராஸ் கேரளசமாஜம் தலைவர் டாக்டர்.ஏ.வி.அனுப் துவக்கிவைத்தார். அமைப்பாளர்கள் எம்.கே.ஏ.அஜீஸ், கே. சசிதரன், எஸ்.சுபாஷ்பாபு, கும்பளங்காடு உண்ணிக்கிரு ஷ்ணன், கே.கே.சசீதரன், சிவதாசன், சிஜூசனல்குமார், ரமேஷ், வி.மோகன், கே.ஆர்.கோபகுமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்த சந்தையில், அனைத்து பாரம்பரிய உணவுவகைகள், நேந்திரம் சிப்ஸ், சக்கரவரட்டி, ஊறு காய் வகைகள், ஆடை அணிகலன்கள், கைவினை ப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புதனன்று (செப் 11) மாலை 4.30 மணி ஓணம் திருவிழா கொண்டாட ப்படுகிறது. இதில் திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம், சமாஜம் தலைவர் பி.கே.என்.பணிக்கர், சேர்மன் சிவதாசன் பிள்ளை, அறக்கட்டளைத் தலைவர் டி.அனந்தன் ஆகியோர் பங்கேற்கிறார்கள் என பொதுச்செயலாளர் பி.கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.