சிதம்பரம், மே 25- கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் அருகே கூடுவெளிசாவடி கிராமத்தைச் சேர்ந்த ஏழை மக்கள் ஆசிர்வாதம் என்ற நுண்கடன் நிறுவனத்திடம் கடன் பெற்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். தற்போது பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் அவர்கள் கடந்த 2 மாதமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழலில் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இந்தச் சூழலிலும் நுண் கடன் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் கடன் பெற்ற வர்களிடம் பணத்தை கட்டா யப்படுத்தி வசூல் செய்து வருகிறார்கள். இதனால் வரு மானமின்றி உள்ள பொது மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். மத்திய அரசு வங்கி களில் மற்றும் நிதி நிறுவ னங்களிடம் கடன் பெற்ற தற்கான தவணைத் தொகையை மூன்று மாதத் திற்கு பிறகு செலுத்தலாம் என அறிவித்தது. தற்போது மேலும் மூன்று மாதம் கூடு தல் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. எனவே கிராமப்புறங்க ளில் உள்ள ஏழை எளிய மக்க ளிடம் கட்டாய வசூலில் ஈடு படும் நுண்கடன் நிறுவனங் கள் மீது அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.