சென்னை, ஏப். 13 - தமிழக மக்களை சுரண்டி பாஜக ஆளும் மாநிலங்களை வாழ வைக்கின் றனர் என்று திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன் கூறினார். அண்ணா நகரில் வாக்கு சேகரிப்புக்கு இடையே செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
ஒன்றிய அரசு 10 ஆண்டுகளாக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதுவும் செய்யவில்லை. தமிழகத் திற்கு வாக்கு கேட்க வரும் ஒன்றிய அமைச்சர்கள் என்ன செய்துள்ளார்கள், என்னென்ன செய்யப் போகிறார்கள் என்று சொல்கிறார்களா? வெறும் கையோடு வந்து வாயால் வடை சுட்டுவிட்டு செல்கிறார்கள். தமிழக நலனின் அக்கரை கொண்டுள்ளதாக பிரச்சாரத்தில் பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். தமிழ கத்தை சுரண்டி பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களை வாழ வைக்கின்றனர்.
தமிழ்நாட்டிற்கு ஏதாவது நல்லது செய்தால்தானே ஒன்றிய ஆட்சியாளர் களை மக்கள் மதிப்பார்கள். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமாவரித்துறை ஆகியற்றுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் அவ்வப்போது தேர்தல் ஆணையமும் சேர்ந்து கொள்கிறது. தமிழ்நாட்டில்தான் தொழில் தொடங்க சிறந்த உட்கட்டமைப்பு உள்ளது.
எனவேதான் ஏராளமான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்கின்றனர். தொழிலதிபர்களை மிரட்டி குஜராத்திற்கு கொண்டு செல் கின்றனர். குஜராத் மாடல், உ.பி.,மாடல் என்றால் முதலீடுகள் தானாக அங்கு செல்ல வேண்டுமல்லவா? பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் பெயிலியர் மாடலாகத்தான் உள்ளது. பிரச்சாரத்தில் நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார். அவரது வார்த்தைகளில் நேர்மை துளியும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.