tamilnadu

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இன்று முதலே மாணவர் சேர்க்கை

சென்னை, பிப்.29- மாணவர்களை அரசுப்  பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் 2024 - 2025 ஆம்  கல்வியாண்டிற்கான மாண வர் சேர்க்கையை மார்ச் 1  முதலே துவங்க வேண்டும்  என்று அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்  கல்வித்துறை உத்தரவிட் டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு, துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பயி லும் மாணவர்களின் கல்வி  தரத்தை உயர்த்தும் வகை யில் ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’ மற் றும் ‘நான் முதல்வன்’ திட்  டங்களுடன் தற்காப்பு கலைப்  பயிற்சி, கல்விச் சுற்றுலா  உள்ளிட்ட பல்வேறு திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றையெல்லாம் பெற்றோர்களிடம் எடுத்து ரைத்து, 5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளிக்  குழந்தைகள் அனைவரை யும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி  அதிகாரிகளுக்கு இயக்கு நர்கள் அறிவொளி மற்றும்  கண்ணப்பன் ஆகியோர்  சுற்றறிக்கை அனுப்பியுள்ள னர்.  

“அரசுப்பள்ளிகளில் தர மான கல்வி வழங்கப்படு வதை பொதுமக்கள் அனை வரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டு பிர சுரங்கள் மூலம் பெற்றோர் களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாண வர்களுக்கு வழங் கப்படும் வசதிகள், நலத் திட்டங்கள், காலைச் சிற்றுண்டி வழங்கு வது குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்த  வேண்டும்.

மேலும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாண வர்களுக்கு கிடைக்கும் முன்னுரிமைகள் குறித்து பெற்றோர்களுக்கு ஆசிரி யர்கள் எடுத்துக் கூறி மாண வர் சேர்க்கையை அதிகரிக்க  வேண்டும்” என்று சுற்ற றிக்கையில் கூறப்பட்டுள் ளது.