tamilnadu

கடந்தாண்டு சாலை விபத்துகளில் 18,074 பேர் உயிரிழப்பு

சென்னை,பிப்.11- 2023 ஆம் ஆண்டு மட்டும், தமிழ்நாட்டில்  சாலை விபத்துகளில் 18,074 பேர் உயிரி ழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டு  சாலை விபத்துகள் குறித்த ஆண்டறிக் கையை, குற்ற ஆவணக் காப்பகம் வெளி யிட்டுள்ளது. அதன்படி, கோவையில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் அதிக உயிரி ழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சென்னை மற்றும் கோவையில் ஒரே எண்ணிக்கையில் 3,642 விபத்துகள் ஏற்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் 1,040 பேரும் சென்னையில் 500 பேரும் விபத்தில் உயிரிழந்தனர். கோவையுடன் ஒப்பிடுகையில் சென்னை யில் உயிரிழப்பு குறைய, அவசர கால சிகிச்சை விரைவாக கிடைப்பதே காரண மாக கூறப்படுகிறது.

மேலும் கோவையின் புற நகர் பகுதிகளில் அதிக விபத்துகள் நடைபெற்றிருப்பது அங்கு அவசர கால சிகிச்சை வசதி இல்லாததும் தெரிய வந்துள் ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 3,387 விபத்துகளில் 912 பேரும், திருப்பூரில் 3,292  பேரில் 861 பேரும், சேலத்தில் 3,174 விபத்து களில் 787 பேரும், கடலூரில் 3,094 விபத்து களில் 580 பேரும், மதுரை மாவட்டத்தில் 2,642 விபத்துகளில் 876 பேரும் உயிரி ழந்துள்ளனர்.

மேலும் திருவள்ளூரில் 2,590 விபத்து களில் 716 பேரும், விழுப்புரத்தில் 2,585 விபத்துகளில் 548 பேரும், திருச்சியில் 2,416 விபத்துகளில் 720 பேரும் உயிரிழந்துள்ள னர். தமிழ்நாட்டில் 2022-ம் ஆண்டு 64,105  விபத்துகளில் 17,844 பேர் உயிரிழந்துள்ள னர். 2023-ம் ஆண்டு 66,841 விபத்துகளில் 18,074 பேர் உயிரிழந்துள்ளனர்.