ராணிப்பேட்டை, ஜூலை 13 - ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷா ரம் தி நேஷனல் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் முஸ்லிம் நிதி உதவி நடுநிலைப் பள்ளியில் தலைவர் கே. முஹம்மத் அய்யூப் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் அ. முஹம்மது பாஹிம் முன்னிலை வகித்தார். இதில் ஆற்காடு நகர காவல் நிலைய ஆய்வாளர் சசிகுமார் கலந்து கொண்டார். தூய்மையான காற்று சுத்தமான நீர் மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் வகையில் மாணவர் களிடையே மரம் நடுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.