சென்னை;
சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் ரூ.38 கோடிவருமானம் கிடைத்துள்ளதாக சென்னை ரெயில்வேகோட்டம் தகவல் வெளியிட்டுள்ளது.தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்னை ரயில்வே கோட்டம் கடந்த 2019-2020நிதியாண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 55 சரக்கு ரயில்களை இயக்கி 2 லட்சத்து20 ஆயிரத்து 61 டன்கள் ஏற்றிச்சென்றதன் மூலம்ரூ.19 கோடி வருவாய் ஈட்டியது. ஆனால் இந்த2020-2021 நிதியாண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 128 சரக்கு ரயில்களை இயக்கி 4 லட்சத்து 97 ஆயிரத்து 876 டன்கள் ஏற்றிச்சென்றதன் மூலமாக கிடைக்கப்பெற்ற வருவாய் ரூ.38 கோடி ஆகும்.இதன்மூலம் சரக்கு போக்குவரத்து 126 சதவீதம்உயர்வு அடைந்துள்ளது. மேலும் கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட கண்டெய்னர் சரக்குரயில் மூலமாக, சுண்ணாம்பு கல், உரம், தாதுப் பொருட்கள் ஏற்றி சென்றதன் மூலமாக சரக்கு போக்குவரத்தின் வருவாய் பெருகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த நிதியாண்டில் ஈட்டப்பட்ட மொத்த வருவாயான ரூ.31 கோடியை கடந்து, சுண்ணாம்பு கல் சரக்கு போக்குவரத்தில் சென்னை ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.