மோடி அரசு வீழ்வதே, இந்திய மக்கள் வாழ்வதற்கான ஒரே வழி என்ற முழக்கத்தை முன்வைத்து, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்தும் 2 நாள் பெருந்திரள் தொடர் அமர்வு நாடு முழுவதும் ஞாயிறன்று துவங்குகிறது.
எழும்பூர் ராஜரத்னம் விளை யாட்டு திடல் அருகில் நடை பெறும் இந்தப் போராட்டத்தில், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன் டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, ஏஐ யுடியுசி, டியுசிசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களும், எம்.எல்.எப், உழைக்கும் மக்கள் மாமன்றம், எல்டியுசி, எல்எல்எப் உள்ளிட்ட மாநில ரீதியில் செயல்படும் சங்கங் களும், ஐக்கிய விவசாயிகள் முன் னணியில் இடம்பெற்றுள்ள விவ சாயிகள் சங்கங்களும் பங்கேற் கின்றன.
நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் மக்க ளுக்கு விரோதமாக, தொழிலா ளர்களுக்கு விரோதமாக, விவ சாயிகளுக்கு விரோதமாக- என அனைத்து பகுதியினரையும் பாதிக்கும் வகையில் பல்வேறு நவீன பொருளாதார கொள்கைகள் அமலாக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்திய பெருமுத லாளிகள், பன்னாட்டு கார்ப்பரேட்டு களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களையும், செல்வங்களையும் வாரிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் பாஜக-வுக்கு இருக்கும் அதீத பெரும் பான்மை பலத்தை பயன்படுத்தி விவசாயத்தையும், விவசாயிகளை யும் பாதிக்கும் மூன்று சட்டங் களை, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக் களையும் மீறி கொண்டு வந்தது. தொழிலாளர்களின் உரிமைகள், நலனை பாதுகாக்கும் அரணாக இருந்த 26 சட்டங்களை, முதலாளி களுக்கு சாதகமாக 4 சட்டத் தொகுப்பு களாக மாற்றி கொண்டு வந்தது. மின்சார சட்டத் திருத்தம், வனப் பாதுகாப்பு சட்டம், கடற்கரை மேலாண்மைச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம், பண மாக்கல் திட்டம், பணமதிப்பு நீக்கத் திட்டம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், நாட்டின் பாதுகாப்பு தள வாட உற்பத்தி நிறுவனங்களை கம்பெனிகளாக மாற்றியது, ராணு வத்திற்கு அக்னிபாத் என்ற பெயரில் குறிப்பிட்ட கால வேலைமுறையில் இளைஞர் களின் வேலை மற்றும் சமூக பாதுகாப்பை பறித்தது; கல்வி, மருத்துவம், ஊட்டச்சத்து உள்ளிட்ட அடிப்படை தேவை களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தது, கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலை உறுதியளிப்பு திட்டத்திற் கான நிதியை வெட்டியது என பல விதமான தாக்குதல்களை இந்திய மக்கள் மீதும், உழைக்கும் மக்கள் மீதும் நடத்தி வருகிறது.
2020-இல் தலைநகர் தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய வீரஞ் செறிந்த முற்றுகைப் போராட்டத் திற்கு தொழிலாளர் வர்க்கம் ஆத ரவுக் கரம் நீட்டியது. ஓராண்டுக்கும் மேலாக நடந்த அந்த போராட்டத் திற்காக நாட்டின் அனைத்து பகுதி களிலும் தொழிலாளி - விவசாயி கூட்டு ஆதரவு இயக்கங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இதன் விளைவாக ஆட்சி அதி கார மமதையில் இருந்த மோடி தலைமையிலான பாஜக அரசு வேறுவழியின்றி விவசாய சட்டங்களை திரும்பப்பெறுவதாக அறிவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து 3 ஆண்டு காலமாக தொழிற்சங்கங்களும், விவசாயிகளின் கூட்டமைப்பான ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் இணைந்து நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பல் வேறு இயக்கங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. இதனொரு பகு தியாகவே ஆகஸ்ட் 24-இல் தில்லி யில் கூடி தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து நடத்திய தேசிய மேடையில் மோடி அரசின் நவீன பொருளாதார கொள்கை களுக்கு எதிராக நவம்பர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் மாநிலத் தலைநகரங்களில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெருந்திரள் தொடர் அமர்வு போராட்டத்தை நடத்துவது என்று அறைகூவல் விடுக்கப்பட்டது.
இந்த அறைகூவலின் படி தமிழ்நாட்டில் நவம்பர் 26, 27 ஆகிய 2 நாட்கள் சென்னையில் எழும்பூர் ராஜரத்னம் விளை யாட்டு திடல் அருகில் பெருள்திரள் தொடர் அமர்வு இயக்கம் நடை பெறுகிறது.