tamilnadu

img

தமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவித்திடுக!

சென்னை, ஜூலை 8- பிணை வழங்கப்பட்டும் சட்ட விரோதமாக தமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் கோருவது தொடர்பாக:- இந்தோனேசியா, பிரான்ஸ், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு ஆன்மீக பயணமாக வந்த 12  பெண்கள் உள்பட 129 இசுலாமி யர்கள் மீது, தமிழகத்தில் 15 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு முதலில் புழல்சிறை யிலும், பின்னர் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 98 பேருக்கு ஏற்கனவே நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சென்னை மாநக ராட்சி ஆணையரிடம் தங்கள் இருப் பிடத்தை தெரிவித்துவிட்டு சென்னை நகருக்குள் தங்கியிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை அடிப்படையில் சொந்தப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படி பிணை வழங்கப்பட்ட பிறகும் மீண்டும் இவர்கள் அனை வரும் புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். மத்திய அரசின் தடுப்பு முகாம்கள் பற்றிய வழிகாட்டுத ல்களை கவனத்தில் கொள்ளாமலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தா மலும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் எந்தவொரு மாநி லத்திலும் இதுபோன்ற நிலை இல்லை. கர்நாடகாவில் பெங்களூரு வில் உள்ள ஹஜ்  இல்லத்தில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். தில்லியில் வெவ்வேறு தனியார் இடங்களி லும், ஐதராபாத்தில் பள்ளி வாசல்களிலும் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மும்பையில் சம்பந்த பட்ட தூதரகங்களில் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சிறையில் தடுப்பு முகாம்களின் வழிகாட்டுதல்களுக்கு மாறாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாகவும் அடிப்படை வசதிகளற்று மிக மோச மான சூழலில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். இது தமிழக அரசு ஆன்மீக சுற்றுலா வந்தவர்களை வன்மத்துடன் அணுகுவதாகவே எண்ண தோன்றுகிறது. எனவே, தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு, உடனடியாக சிறையிலுள்ள அனை வரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும்;  இவர்கள் மீதான வழக்கை முடித்து அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்ப உரிய ஏற்பாடு களைச் செய்ய வேண்டும் எனவும்;  அவர்களின் சொந்த நாடு களுக்கு அனுப்பப்படும் வரை, நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் விரும்பும் தனியார் இடங்களில் அரசின் விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

;