tamilnadu

img

தென்சென்னை,திருப்பெரும்புதூர் மற்றும் வடசென்னை முக்கிய செய்திகள்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தி.நகர் பகுதி, சிஐடி நகர் (141வது வட்டம்) பகுதியில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதனை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், பகுதிச் செயலாளர் இ.மூர்த்தி உள்ளிட்டோர் உள்ளனர்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அயப்பாக்கம் ஊராட்சி பகுதியில் வாக்கு சேகரித்தார். திமுக மாவட்டச் செயலாளர் ச.மு.நாசர், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், திமுக ஒன்றியச் செயலாளர் துரைவீரமணி, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மதுரவாயல் பகுதிச் செயலாளர் வி.தாமஸ் உள்ளிட்டு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு ஆலந்தூர் பகுதி, 162, 167 வட்டங்களில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், திமுக மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.கே.இப்ராஹிம், பகுதிச் செயலாளர்கள் என்.சந்திரன் (திமுக), எஸ்.அரிகிருஷ்ணன் (சிபிஎம்), சீராளன் (விசிக), சிக்கந்தர் (காங்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு திரைக்கலைஞர் உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆர் நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, தி.நகர் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.


மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் - எண்ணூர் பகுதிகுழு சார்பில் 10 வது வட்டம் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் அருகில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். ஆர் .மோகன் (ஆட்டோ) வரவேற்றார். சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ஜெயராமன், திமுக கிழக்கு பகுதிச் செயலாளர் தீ.மு.தனியரசு, காங்கிரஸ் மாநில பொதுக்குழு ஜி.பொன்னுரங்கம், திமுக அவைத் தலைவர் முத்தையா, 7வது வட்டச் செயலாளர் ஆதி குருசாமி, திமுக ஆசைத்தம்பி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். பாக்கியம், பொதுக்குழு உறுப்பினர் ரவீந்திரன், ஆறுமுக லட்சுமி, நாகராஜ் பாக்கியம் உட்பட பலர் பங்கேற்றனர்.


மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை அயன்புரம் வடக்குமாட வீதியில் ஜெ.ஏழுமலை தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொகுதிக் குழு உறுப்பினர் வி.டில்லிபாபு வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எம்.ராமகிருஷ்ணன், தொகுதி செயலாளர் எம்.ஆர்.மதியழகன், ஆர்.ராமு, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் மணிமேகலை, திமுக தொகுதிச் செயலாளர் வே.வாசு, காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் ஜி.கோதண்டன், மதிமுக மாவட்ட அவைத் தலைவர் சு.நவநீதகிருஷ்ணன், விசிக மாவட்ட பொருளாளர் செ.பொன்னிவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.அப்துல்ஷபிக், மனித நேய மக்கள் கட்சி தொகுதி செயலாளர் ஜாகிர் உசேன் உள்ளிடோரும் பேசினர்.

;