சென்னை,மார்ச் 5- இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஸ்வாதி மோகன், நாசா ஆய்வகத்தில் தலைமைப் பொறி யாளராக உள்ளார். இந்தியாவில் பிறந்த அவர், குழந்தையாக இருக்கும் போது அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.
ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளியில் முனைவர் பட்டங் களை பெற்றார். சனி கோள் மற்றும் நிலா ஆய்வுகள் போன்ற பலவற்றில் அவர் பணியாற்றியுள்ளார். 2013ம் ஆண்டில் இருந்து மார்ஸ் 2020 எனப்படும் செவ்வாய் விண்கலம் திட்டத்தில் பணிபுரிந்துள்ளார். மார்ஸ் 2020 திட்டத்தில் அணுகுமுறைக் கட்டுப்பாட்டு அமைப்பை அவர் வழிநடத்தியதோடு முன்னணி அமைப்பு பொறியாளராகவும் செய லாற்றினார்.
இந்நிலையில், செவ்வாயன்று (மார்ச் 5), சென்னையை சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் மற்றும் அறி வியல் ஆர்வலர்கள் உடன் விண்வெளி அறிவியல் குறித்து கலந்துரையாடினார். “விண்வெளி ஆய்வில் உள்ள கடினமான சவால் களை நாம் எதிர்கொள்ளும் வேளை யில் நமது குழுக்களில் பன்முகத் தன்மை அவசியம்.
குறிப்பாக பெண்கள் மற்றும் இதுவரை பிரதி நிதித்துவம் பெறாதோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆர்வம், நோக்கம் மற்றும் விடாமுயற்சியுடன், வலிமை யான செயல்களை ஒன்றிணைந்து செய்ய நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்” என்றார்.