வாழ்த்துச் செய்திகள் வாட்ஸ்அப் மெசேஜ் மூலமாக அனுப்பப்பட்டாலும் தன் கைப்பட எழுதி அனுப்பப்படும் வாழ்த்துக்களே என்றும் உணர்வுப் பூர்வமானதாக இருக்கும். கைப்பட எழுதுவதும் வரைவதும் இயற்கையான செயல்முறைகள் என்றாலும் அதற்கு ஒவ்வொரு குழந்தை களும் இயல்பாகவே ஈர்க்கப்பட்டு வீடுகளில், வீட்டுச் சுவர் களில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தத் தொடங்கு வார்கள். பிறகு பள்ளிப்பருவத்தில் முதலில் சிலேட், குச்சி, சாக்பீஸ் தொடங்கி பிறகு பென்சில், பேனாவால் எழுது வதற்கு பள்ளிக்கூடங்களில் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். ஆனால் இந்த நடைமுறை தற்பொழுது வழக் கொழிந்து விட்டது.. அதாவது டெக்னாலஜி ஒருபுறம் வரமாக இருந்தாலும் மறுபுறம் மனிதர்களின் செயல்பாடுகளை செயலாற்றதாக்கி விடுகிறது. தற்போதைய கல்விச் சூழலில் குழந்தைகள் முதலில் எழுத்துக்களை வாசிக்கத் தொடங்குவார்கள். சொல்லிக் கொடுத்தது போன்று சொல்ல பழகுவார்கள் (இமிடேசன்). பிறகு பள்ளிகளில் பரிந்துரைக்கப் பட்ட புத்தகங்களிலிருந்து வாசிக்கப்பழகுவார்கள்; எழுதப் பழகுவார்கள். அடுத்த நிலையான மூன்றாம் நிலை என்பது உச்சகட்ட படுபாதகமான சூழ்நிலையாக இருக்கிறது. எளிமையாக கற்பித்தல் அல்லது கற்றல் என்கிற முறையில் மாணவர்கள் தரவுகளை பதிவிறக்கம் செய்வதும் மேலும் வெப்சைட்களில் கட் அண்டு காப்பி பேஸ்ட் செய்து பிறர் தேவைக்காக கூலிக்காக எழுதிக் கொடுக்கும் எழுத்தாளர்களிடம் (கோஸ்ட் எழுத்தாளர்கள்) இருந்து பிராஜக்டுகளை வாங்குகிறார்கள். இந்த நடைமுறை அனைத்து கல்விச்சூழல்மற்றும் ஆராய்ச்சிகளிலும் பொதுவாகி விட்டது.
முறையான திட்டமின்மை
தற்போதைய கல்விச் சூழல் என்பது கற்றல், கற்பித்தல் முறைகளை மட்டுமே மையப்படுத்துகிறது.சுயமாக கற்றுக்கொள்ளுதல் அவர்களின் கற்றல் திறனை ஊக்குவித்தல் போன்றவற்றிற்கான திட்டமிடலோடு கூடியதாக இல்லை. நிகழ்காலத்துக்கு பொருத்தமில்லாத ஒரு பழமையான திட்டத்தையே கொண்டிருக்கிறது. வெறும் வறட்டுத்தனமான நடைமுறை கல்விக்கும் அவர்களுடைய கற்றல் ஆர்வத்திற்கும் ஈடு கொடுக்க இயலாத இலக்கணத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. நிறுத்தல் குறியிடுதல், முக்கிய கருத்துக்களை குறிப்பது போன்ற பல விஷயங்களை தேவையற்றதாக மாற்றியிருக்கிறது. எழுத்தாளர்களின் குணாதிசயமான கருத்துகளை உருவாக்குவதற்கும் அதை எழுதுவதற்கும் கற்பவர்களுக்கு மிக அரிதாகவே. அறிமுகப் படுத்தப்படுகிறது. மற்றுமொரு காரணம் நம்முடைய வாசிப்பும் மிகக் குறைவாக இருப்பதால் முறையானவாசிப்பு இல்லாமல் எழுத்தும் செறிவற்றதாக இருக்கிறது. ஆயிரம் புத்தகங்களை படித்தால் உங்கள் சொற்களும் எழுத்துக்களும் அருவி போல கொட்டும் வாசிப்பும் எழுத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய திறன்கள். இந்த இரண்டு திறன்களையும் பயன்படுத்தப்படும்போது கற்றல் திறன் மேம்படுத்தப்படுகிறது. எழுதுவதற்காக உந்தப்படுகிற சிலருக்கு கைப்பட எழுதுவதை விட கீ போர்டு மூலமாக எழுதுவது வரமாக இருக்கிறது. கைப்பட எழுதுவதை விட. கீ போர்டு மூலம் எழுதுவதால் பிழையை தானாகச் சரி செய்து கொள்வது, ஸ்பெல்லிங் கற்றுக்கொள்வது, இலக்கணப் பிழையை தெரியப்படுத்துவது என்று தேவைக்கு அதிகமாக தொழில் நுட்ப முறைகள் பயன்பாட்டில் இருக்கிறது. தொழில் நுட்பங்களில் அசுர வளர்ச்சி இருந்தாலும் கல்வியாளர்கள் வலியுறுத்துவது கைப்பட எழுதுவதையே. அதுவே நம்முடைய அறிவை கூர்மையாக்குகிறது. மற்றும் மனிதனின் நினைவு சக்தியை அதிகரிக்கிறது. சிந்தனையை வளர்க்கிறது. மனித பரிணாமத்தில் ஒரு திறன் என்பது ஒரு தடவை இழக்கப்பட்டால் அதை மீட்டெடுப்பது என்றும் அரிதாகவே இருக்கிறது. கைகளால் எழுதக்கூடிய எழுத்து முறையை வரவேற்பது பின்னோக்கிய அல்லது பழமையான விஷயமாக இருந்தாலும் கைப்பட எழுதுவது மட்டுமே அறிவு வளர்ச்சி, மன வளர்ச்சிக்கு வித்திடுவதோடு. மனிதனின் மூளை செயல்பாட்டிற்கும், தசைகள் வலிமை பெறுவதற்கும் உந்து விசையாக இருக்கிறது..
- ஸோயா