tamilnadu

img

தமிழகத்திற்கு ஆக்கப்பூர்வ திட்டங்களை கேட்டால் பிரதமருக்கு காது கேட்பதில்லை

சென்னை, ஏப். 12 - தமிழகத்திற்கான தேவைகளை கேட்டால் பிரதமருக்கு காது கேட்கவில்லை. பாஜகவினரை விமர்சித்தால் மட்டும் கேட்கிறது என்று திமுக மத்தியசென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் கூறினார். துறைமுகம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில நலன் காக்க குரல் கொடுத்து போராடினோம். 

சிஏஏ  போன்றவற்றை எதிர்த்தோம். ஆனால், பாஜகவிற்கு பயந்து கொண்டு, சிஏஏ சட்டத்தை அதிமுக ஆதரித்தது. இஸ்லா மியர்களுக்கு  துரோகம் செய்துவிட்டது என்றார். ஒன்றிய அரசு தமிழகத்திற்கென்று எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. வெள்ள நிவாரணம் கோரினோம் தரவில்லை.

 மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பணம் கேட்கிறோம் தரவில்லை. இப்படி ஏராளமாக  தமிழகத்தின் நலன் சார்ந்து கோரிக்கை களை வைக்கிறோம். அதெல்லாம் பிரதமர்  மோடியின் காதில் விழவில்லை. அண்ணா மலையை கோமாளி என்று சொன்னது மட்டும் அவர் காதில் விழுகிறது என்றார். திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது.

தேர்தல் வாக்குறுதி தராத புதுப்புது திட்டங்களையும் செயல் படுத்தி வருகிறது. அவை அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளது.  திமுக அணி 40 தொகுதிகளிலும் வெல்லும் என்றும்  அவர் கூறினார். இந்த பிரச்சாரத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பகுதிச் செயலாளர் ராஜசேகர், சிபிஎம் பகுதிச் செயலாளர் ஜலாலுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.