tamilnadu

img

நோய்த்தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதைத் தடுத்தால் 3 ஆண்டுகள் சிறை... தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிப்பு 

சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதால் அரசு 5 மாநகராட்சி பகுதிகளை 4 நாட்களுக்கு மூடியுள்ளது. 

இந்நிலையில் கொரோனாவால் பலியான மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய மறுத்த விவகாரத்தை வைத்து தமிழக அரசு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதில், தொற்று நோயால் உயிரிழந்தவர்கள் உடல் கண்ணியமான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும் அதனைத் தடுக்க முயற்சிப்பது கடும் குற்றம்  எனத் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

நோய்த் தொற்றால் இறந்தவர்களின் உடலைத் தகனம்/ அடக்கம் செய்வதைத் தடுத்தால் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றையும் பிறப்பித்துள்ளது.  
 

;