தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றாம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி,
எரிசக்தி முதன்மைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்.
வணிக வரித்துறை இணை ஆணையராக வீர் பிரதாப் சிங்.
தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை கூடுதல் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா நியமனம்.
சிறுபான்மையினர் நல இயக்குநராக ஆசியா மரியம் நியமனம்.
பட்டு வளர்ப்புத்துறை இயக்குநராக பணியாற்றிவந்த விஜயா ராணி, கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமனம்.
கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சுரேஷ்குமார் நியமனம்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிய முதன்மை செயலாளர், தலைவர், நிர்வாக இயக்குநராக எஸ்.விஜயகுமார் நியமனம்.
அடையாறு-கூவம் மறுசீரமைப்பு திட்ட சிறப்பு அலுவலராகவும் எஸ்.விஜயகுமாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறு தொழில் கழகத்தின் முதன்மை செயலாளர், தலைவர், நிர்வாக இயக்குநராக ஸ்வர்ணா நியமனம்.
தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஆர்.கண்ணன் நியமனம்.
பட்டு வளர்ப்புத்துறை இயக்குநராக சந்திரசேகர் சகாமுரி நியமனம்.
நாகை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முகமையின் திட்ட அலுவலராஜ ரஞ்சித் சிங் நியமனம்.
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முகமையின் திட்ட அலுவலராக அலர்மேல்மங்கை நியமனம்.