tamilnadu

இளைஞர் மீது தாக்குதல்  காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை, ஜூன் 30-   சென்னை அண்ணாநகரில் மருந்து வாங்க சென்றவரை காவலர்கள் தாக்கி தரதரவென இழுத்துச் சென்ற விவகாரம்  தொடர்பாக மனித உரிமை ஆணையம் காவல் ஆணை யருக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. ஊரடங்கை மீறியதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு பதில்  காவல்நிலையம் அழைத்து செல்வது ஏன்? என்றும்,  அத்து மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?  என்றும் மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்க காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

;