“மக்களவையில், நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா அவர்கள், எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மதுரை எய்ம்ஸ் பற்றிய எந்த விபரமும் இல்லை. அவையில் கேள்வி எழுப்பப்பட்ட போது “ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டதில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுவிட்டது, விரைவில் சரிசெய்து பணிகளை துவக்கிவிடுவோம்” என்றார். மோடி ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடைபெறும் பணிகளில் மட்டும் தொடர்ந்து தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படக் காரணம் என்ன?” என சிபிஎம் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.