tamilnadu

img

7 ஆண்டுகளாக இருளர் இன மக்களிடம் ஒப்படைக்காத வீடுகள்

கிருஷ்ணகிரி, ஆக. 21- கிருஷ்ணகிரி ஒன்றியம் பச்சி கானப்பள்ளி ஊராட்சியில் உள்ளது கொத்துப்பள்ளி கிராமம். இங்கு பழங்குடி இருளர் இன  மக்களுக்காக 2013 - 14இல் ஊரக  வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் அழிவின் விளிம்பில்  உள்ள பழங்குடியினர் மேம்பாட்டுத்  திட்டத்தின் கீழ் 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 15 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. கட்டுமானப் பணி கள் முழுமையடைந்த நிலையில்  மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் மட்டும் வழங்க வேண்டியுள்ளது. இணைப்பு வழங்கி வீடு களை ஒப்படைக்கக் கோரி பய னாளிகள் பல முறை அதிகாரிகளி டம் மனு அளித்தும் இதுவரை  நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பயனாளிகள் தொகுப்பு வீடுகளின் அருகில் குடி சைகளில் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதி யும் இல்லாமல் இருளில், பாம்பு, எலி, பூச்சி தொல்லைகளுக்கு இடையில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் புதிதாக கட்டப்பட்ட வீடுகளில் சிலர் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்க ளில் ஈடுபடுகின்றனர்.  கட்டிய வீடுகள் 7 ஆண்டுகளாக பய னாளிகளுக்கு வழங்கப்படாமலும், பராமரிப்பில்லாமலும் உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மீதமுள்ள பணிகளை முடித்து உட னடியாக பயனாளிகளுக்கு வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் காலம் கடத்தி னால் போராட்டம் நடத்தப்படும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டக் குழு உறுப்பினர் கேசி.ராமசாமி, வட்டச் செயலாளர் ராஜா  ஆகியோர் தெரிவித்தனர்.