tamilnadu

img

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (06.12.23) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

வங்ககடலில் உருவாகிய மிக்ஜாம் புயலால் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள். பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும் (4.12.2023), இன்றும் (5.12.2023) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. 

தற்போது, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், நாளை (6.12.2023) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.