கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை (அக்டோபர் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை (அக்டோபர் 16) விடுமுறை என்று அவர் தெரிவித்துள்ளார்.