tamilnadu

img

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை (அக்டோபர் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை (அக்டோபர் 16) விடுமுறை என்று அவர் தெரிவித்துள்ளார்.