இந்த தேசத்தில் இந்துக்கள் 87 கோடி மக்கள். இஸ்லாமியர் 27 கோடி. யார் யாரை மிரட்டி அவர்களது சொத்துக்களை அபகரிக்க முடியும்? எதற்காக ஒரு தாய் மக்களாக வாழும் மக்களை பிளவுபடுத்தும் இந்த அநியாய முயற்சி? தேர்தல் முடிவதற்குள் இதைவிடவும் மோசமாக நீங்கள் பேசுவீர்கள்! வரலாறு உங்களை மன்னிக்காது!” என்று மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விமர்சித்துள்ளார்.