tamilnadu

img

ஒன்றிய பட்ஜெட் 2024-2025 முக்கிய அம்சங்கள்

மழைக்கால கூட்டத்தொடரின் 2ஆம் நாளான செவ்வாயன்று காலை 11 மணிக்கு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த ஒன்றிய பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்:

w    80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் “பிஎம் கரீப் அன்ன யோஜனா” திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
w நகரங்கள், கிராமப்புறங்களில் 3 கோடி வீடுகள் கட்டப்படும்.
w ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
w தொழிலாளர்களுக்கான தங்கும் இடம் வசதி அரசு - தனியார் பங்களிப்பில் உருவாக்கப்படும்.
w நாடு முழுவதும் 20 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
w தொழில் நிறுவனங்களுக்கு புதிய தீர்ப்பாயம் உருவாக்கப்படும். 
w 30 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட 14 பெருநகரங்களில் பொதுப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
w அடுத்த 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் அரசு சார்பில் 100 சாலையோர உணவு மையங்கள் உருவாக்கப்படும்.
w பிரதமரின் சூர்யா கர் முப்த் பிஜிலி யோஜனா (PM Surya Ghar Muft Bijli ) திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு சோலார் பேனல் மூலம் சூரிய மின் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
w குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
w அசாம் மாநிலத்தில் வெள்ள மேலாண்மை, நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு.
w பிரதமரின் கிராம சாலை திட்டம் 4இன் கீழ் எல்லா காலநிலையையும் தாக்குப்பிடிக்கும் வகையில் 25,000 கிராமப் பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படும்.
w விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1,000 கோடி மூலதன நிதியாக வைக்கப்படும்.
w நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 4.9% ஆக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
w நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 1 கோடி நகர்ப்புற ஏழை மக்கள் பயனடைவர்.
w புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலும் சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது.
w வரிச் சலுகைகளால் மொபைல் போன்கள், மொபைல் உதிரி பாகங்கள், சார்ஜர்களின் விலை குறையலாம்.
w தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
w பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
w பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.
w அறக்கட்டளைகளுக்கு இரட்டை வரி முறை நீக்கப்பட்டு, அது ஒரே வரி முறையாக நடைமுறைப் படுத்தப்படும்.
w முதலீட்டாளர்களுக்கான “ஏஞ்சல் டாக்ஸ்” ரத்து செய்யப்படுகிறது. 

வருமான வரி

v புதிய வரி முறையை பின்பற்றுவோருக்கு, ரூ.3 லட்சம்  வரையிலான ஆண்டு வருமானத்துக்கு - வரி இல்லை, ரூ.3 - 7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு - 5% வரி, ரூ. 7 முதல் -10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10% வரி, ரூ.10 முதல் -12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15% வரி, ரூ.12 முதல் - 15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20%, ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்துக்கு 30% வரி விதிக்கப்படும்.
v நியூ ரெஜீம் எனப்படும் புதிய வரிமுறையை, பின்பற்றுபவர்களுக்கு வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு (ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன்) ரூ.50,000ல் இருந்து ரூ.75,000 ஆக  அதிகரிக்கப்பட்டுள்ளது. 
v குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக அதிகரிக்கப்
பட்டுள்ளது. இவற்றின் மூலம் 4 கோடி வருமானதாரர்கள், ஓய்வூதியர்கள் பலன் பெறுவார்கள்.
v ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடித்தம் குறைக்கப்படுகிறது. டிடிஎஸ் தாக்கலில் நிகழும் தாமதம் இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது.

கல்வி - வேலைவாய்ப்பு

w    கல்வி, தொழில்திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
w மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன். அதாவது ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.
w புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும். அதாவது இபிஎப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெறும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும். இத்திட்டம் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவர்.
w 4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
w இளைஞர்களுக்காக 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கான பிரதமரின் 5 அம்சத் திட்ட அமலாக்கத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
w நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு பணி அனுபவம் பெறும் வகையில்
இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும். இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் ஒருமுறை உதவியாக இளைஞர் களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும்.

பெண்கள்

v பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். 
v வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக விடுதி மற்றும் குழந்தை பராமரிப்பகங்கள் ஏற்படுத்தப்படும்.
v முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்க வழி வகை செய்யப்படும். 
v முன்பு ரூ.10 லட்சம் வரம்பாக இருந்தபோது கடன் பெற்று, அதை உரிய முறையில் திருப்பிச் செலுத்தியவர்கள் புதிய வரம்பின் கீழ் பயன் பெறலாம்.

வேளாண்மை

w வேளாண் சார்ந்த துறைகளுக்கு ரூ. 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு 
w நிலக்கடலை, எள், சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் வகுக்கப்படும்.
w    அடக்க விலையை காட்டிலும் 20% லாபத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.
w பருவ நிலையை தாக்குப்பிடித்து வளரும் 102 வகை புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
w விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அமலாக்க மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். 
w காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத பயிர்களை அறிமுகப்படுத்த திட்டம் வகுக்கப்படும்.
w பருப்பு, எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவு பெற திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
w நாடு முழுவதும் 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்.