சென்னை, ஏப்.20- நீதித்துறையின் நெறி முறைகளை மாவட்ட நீதி பதிகள் தீவிரமாக கடை பிடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன் றம் தெரிவித்துள்ளது.
மாவட்ட நீதிமன்றங் களில் பணிபுரியக்கூடிய நீதிபதிகள் மீது சில புகார் கள் வந்ததை அடுத்து, அனைத்து மாவட்ட நீதி பதிகளுக்கும் சென்னை உயர் நீதிமன்றத் தலை மைப் பதிவாளர் ஜோதிராமன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும். நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறி ஞர்களுடன் நெருக்கமாக இருப்பதையும், தேவை யின்றி வழக்கறிஞர், சங்க நிர்வாகிகளுடன் செல் போனில், சேம்பரில் பேசுவதையும் தவிர்க்க வேண் டும். பொதுமக்கள் பார்வையில் உள்ளோம் என்ற விழிப்புடன் எப்போதும் நீதிபதிகள் இருக்க வேண் டும்; பாரபட்சமற்ற நடவடிக்கை மூலம் மக்களின் நம்பிக்கையை உறுதிபடுத்த வேண்டும்” என்று தலைமைப் பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நீதித்துறையின் நெறிமுறைகளை கடை பிடிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்” எனவும் தலைமை பதிவாளர் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.