tamilnadu

எஸ்எப்ஐ மீதான வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 1 - மாணவர் சங்கத்தினர் மீதான பொய் வழக்கை வியாழனன்று (பிப்.29) சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

2015 ஆம் ஆண்டு நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரியில் அடிப்படை வசதியை கேட்டு  மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் தலைமை தாங்கி நடத்தியது. இதனால் ஆத்திரமுற்ற கல்லூரி தாளாளர் அளித்த  பொய் புகாரின் பேரில் மாணவர் சங்க தலைவர்கள் ஜோ.ராஜ்மோகன், வீ.மாரி யப்பன், பி.மூக்கையா, எம்.கார்த்திக், ப.ஆறுமுகம், எஸ்.ரேவதி, ஆர்.ஜான்சி ராணி ஆகியோர் மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கு சைதாப் பேட்டை நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் வழக்கை ரத்து செய்யக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில்  வழக்கறிஞர் திரு மூர்த்தி வாதிட்டார். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றம்  புரிந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என கூறி  நீதிபதி தமிழ்ச்செல்வி வழக்கை ரத்து செய்து உத்தர விட்டார்.