உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்பு
சென்னை, செப். 22- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வரும் கே.ஆர்.ஸ்ரீராமை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல மேலும் 3 பேர் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமை யிலான கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருந்தது. அந்த பரிந்துரையை ஏற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமை நியமித்து குடியரசுத் தலைவர்உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக ஏற்கெனவே மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரான எம்.ஜோதிராமன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியான ஆர்.பூர்ணிமா மற்றும் சென்னை தொழிலக தீர்ப்பாயத்தில் சிறப்பு நீதிபதியாக பணியாற்றி வரும் ஏ.டி.மரியா கிளேட் ஆகிய 3 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இவர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்.
2,676 பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, செப். 22- தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பல்வேறு பதவிகளில் 2,676 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தால் கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 6 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படை யில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு தற்காலி கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் https://tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காண லுக்கான அழைப்புக் கடிதத்தை மேற்கூறிய இணைய தளத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் தேர்வர்கள் தங்களின் லாக்-இன் ஐடி-யை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.