சென்னை,டிச.7- தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9 ஆம் தேதி நடத்தவிருந்த தேர்வை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சூரஜ் குமார், செந்தில்குமார், ஸ்வேதா உள்ளிட்ட 85 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2021-22 ஆண்டுகளில் மருத்துவ பட்ட மேற் படிப்பை தொடங்கிய தங்களுக்கு வரும் 9 ஆம் தேதி இறுதி தேர்வை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் பல்கலைக்கழகம் அறிவித்தது. இதற்கு முன்பாக இணையதளம் வழியாக ஆராய்ச்சி கட்டுரைகளை தாக்கல் செய்து அதை மருத்துவ இதழில் வெளியிட்டிருக்க வேண்டும்.
ஆய்வுக்கட்டுரைகளை தாக்கல் செய்ய நவம்பர் 29 ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டி ருந்தது. ஆனால், மோசமான இணையதள சேவை காரணமாக ஆன்லைனில் உரிய நேரத்தில் ஆய்வு கட்டுரைகளை பதிவேற்றம் செய்வதில் கால விரயம் ஏற்பட்ட தால் தங்களால் இறுதி தேர்வுக்கு தயாராக முடிவில்லை.
இந்நிலையில் ஆய்வு கட்டுரை களை தாக்கல் செய்வதற்கும் இறுதி தேர்வுக்கு போதுமான இடைவெளி இல்லாததால் தேர்வு எழுதும் மருத்துவ மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் அழுத்தத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள். தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான இறுதி தேர்வை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. அந்த அடிப்படையில் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடத்துமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு நடை பெற்றது. மாணவர் தரப்பின் வாதத்தை ஏற்று வரும் 9 ஆம் தேதி நடக்க இருந்த இறுதி தேர்வை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவினை பின்பற்றி மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக் கான இறுதி தேர்வை டிசம்பர் இறுதி வாரத்தில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடத்த தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழ கத்திற்கு உத்தரவிட்டார்.