tamilnadu

img

அதீத மழை: 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’

சென்னை:
அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரம் அடைந்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட்  விடுக்கப் பட்டுள்ளது. இதேபோல் வருகிற 10 ஆம் தேதி வரை இந்த பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் மிக கனமழை பெய்யும். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக் கல், வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலில் 3.5 மீட்டரில் இருந்து 4.2 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பக்கூடும்.இவ்வாறு அதில் தெரி
விக்கப்பட்டுள்ளது.

;