tamilnadu

img

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை;
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், வெப்பச் சலனம் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான பூம்புகார், கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இந்த தொடர் கனமழையால் சம்பா சாகுபடி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

;