தமிழகத்தில் ஏப்.27 வரை வெப்ப அலை வீசும்
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை, ஏப்.23- தமிழ்நாட்டில் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தி ருக்கிறது.
“வட தமிழக மாவட்டங்களில் ஏப்ரல் 23, 24 ஆகிய 2 நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும். தமிழக உள் மாவட்டங்க ளில் 27-ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதி கமாக இருக்கக் கூடும்.
சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட் டில் 43 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருக்கி றது. அதேபோல் சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
ஏப்ரல் 25 அன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய் யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரபல சினிமா இயக்குநர்
‘பசி’ துரை காலமானார்!
சென்னை, ஏப்.23- தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக் குநர்களில் ஒருவரான துரை உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.
1979-ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று வெளியான திரைப்படம் ‘பசி’. சென் னையின் கூவம் ஆற்றின் கரையோரம் வாழும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வி யலை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. சிறந்த இயக்குநர், திரைப்படம், சிறந்த நடிகை என்று மூன்று தேசிய விருதுகளோடு மாநில அரசு விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல்வேறு விருதுகளை குவித்த எதார்த்த திரைப்படம்.
பசி திரைப்படத்திற்கு கிடைத்த வர வேற்பைத் தொடர்ந்து அதே போன்ற படங்களை இயக்கி புகழ்பெற்றார். கம லின் நீயா, ரஜினியின் ஆயிரம் ஜென்மங் கள், சிவாஜியின் துணை உட்பட தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்கள் அனைவரையும் வைத்து திரைப்படங் களை இயக்கியுள்ளார். இயக்குநர் மட்டு மன்றி கதாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் துரை.
இவருடைய இயற்பெயர் செல்ல துரை. 25.02.1940-ஆண்டு சாமுவேல் ஜாக்கப், ராஜம்மாள் தம்பதிக்கு மக னாக பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.