சென்னை, செப். 28- சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும் நிறுவனங்களின் திறனை வளர்க்கவும், மேம் பட்ட சுகாதாரப் பாதுகாப்பை வழங்கவும், நவீன தொழில் நுட்பத்தைக் காட்சிப்ப டுத்தும் பன்னாட்டு சுகா தாரத் தொழில்நுட்பக் கருத்த ரங்கு “கேஹோடெக் 2019’’ சென்னை கிண்டி ஐஐடியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1000க்கும் அதிகமான சுகாதாரப் பாதுகாப்பு நிபு ணர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இரு நாள் நிகழ்வில் இருபத்தி ஐந்துக் கும் மேற்பட்ட பேச்சாளர்கள் உரையாற்றினர். இது குறித்து கேஹோ தலைவர் டாக்டர் விஜய் அகர்வால் கூறுகை யில் ‘ஒரே கூரையின் கீழ் இருபத்தி ஐந்துக்கும் மேற் பட்ட சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனங்களைக் கொண்டு வந்ததன் மூலம் கேஹோ டெக் 2019 நவீன தொழில்நுட் பம், முதலீடு, சிறந்த நடை முறைகள் ஆகியவற்றைக் கொண்ட நாட்டிலேயே மிகப் பெரிய நிகழ்வாக அமைந்தது என்றார். கேஹோடெக் 2019 அவைத் தலைவர் சமீர் மேத்தா பேசுகையில் ‘சுகா தாரப் பாதுகாப்பு வழங்க லில் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரு கிறது. தகவல் தொழில் நுட்பம், மருத்துவசாதனம், அதன் செய்முறைகள் ஆகிய வற்றில் அண்மைக்கால முன்னேற்றங்களை தெரிந்து கொள்ள இந்த கருத்தரங்கம் உதவும் என்றார்.