சென்னை எழும்பூர் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளோடு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தீபாவளி பண்டிகையை கொணடாடினார். தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் செந்தில்ராஜ், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, ஊரகநலப்பணிகள் இயக்குநர் சுவாதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வசந்தாமணி உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.