சென்னை, மே 21-சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில்தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராஜா (27). இவர் எழும்பூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். ராஜா ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை எழும்பூரில் உள்ள தனது குடியிருப்பிற்கு வந்துள்ளார். ஊரில் இருந்துவரும் போது மனைவியின் நகைகள் 10 சவரனை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இரவு முழுவதும் பயணம் செய்ததால் உடல் அசதியில் வீட்டிற்கு வந்த உடன், நகையை படுக்கை அறையில் வைத்துவிட்டு தூங்கி உள்ளார். பின்னர் 8 மணியளவில் எழுந்து பையில் இருந்த 10 சவரன் நகையை பீரோவில்வைக்க எடுத்த போது, பையில் நகை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து ராஜாஎழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துதஞ்சாவூரில் இருந்த பேருந்தில் பயணம் செய்யும் போது நகைகள் திருடு போனதா அல்லது காவலர் குடியிருப்பிற்கு வந்த பிறகு நகை திருடு போனதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் குடியிருப்பிலேயே 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.