சென்னை, டிச.7 - சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் 3-வது நாளாக ஆய்வு செய்தார். அப்போது, மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.
‘மிக்ஜம்’ புயல் தமிழ்நாட்டின் வட மாவட்டங் களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் இந்த புயல் காரணமாக அதிக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. புயல் கரையை கடந்து மழை ஓய்ந்த பிறகு வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.
கனமழையால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடை பெற்று வருகின்றன. சுமார் 42 ஆயிரம் பேர் முகாம்க ளில் உள்ளனர். அவர்க ளுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்கள் வழங்கப் பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அன காபுத்தூரில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதன்பின்னர் நிவாரண முகாம்களில் தங்கவைக் கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி, பால், பிரட், பாய், போர்வை உள்ளிட்ட நிவா ரண பொருட்களை வழங்கி னார்.
அப்போது, அமைச்சர் கள் தா.மோ.அன்பரசன், அர.சக்கரபாணி சட்டமன்ற உறுப்பினர், இ.கருணாநிதி மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். மீட்பு, நிவா ரணப் பணிகளை வேகப் படுத்துமாறு அவர் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.