tamilnadu

15 ஆண்டுகளுக்கு மேலாக அமலாகவில்லை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கட்டணங்களில் விலக்கு அளித்திடுக!

சென்னை, மே 9- மாற்றுத்திறன் மாணவர் களுக்கு கல்லூரி கட்டணங்களில் விலக்களித்து அரசாணைகள் வெளியிட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் பெரும்பாலான கல் லூரிகளில் அமலாகவில்லை. இதில் தலைமைச் செயலாளர் தலை யிட்டு தீர்வுகாண வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்  றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்  கம் (TARATDAC) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநி லத் தலைவர் தோ.வில்சன், மாநிலப்  பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் தமிழக அரசின் தலை மைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் வருமாறு:

பல்கலைக்கழகங்கள், திறந்த நிலை பல்கலைக்கழகங்கள், சட்டம்,  மருத்துவம், பொறியியல், மீன் வளம், கால்நடை, பாலிடெக்னிக், சிறப்பு பயிலகங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு கல்விக்கட்டணம் (Tuition Fees)  செலுத்துவதில் இருந்து விலக்க ளித்து 2008 ஆம் ஆண்டு அர சாணை(எண்.135) உள்ளது.    இது  தவிர ஆய்வுக்கூட கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட சிறப்பு  கட்டணங்களில் இருந்து விலக்க ளித்து 2010 அரசாணை(எண்.30) உள்ளது.

இந்த  அரசாணைகளின் பயன்  களை மாற்றுத்திறன் மாணாக் கர்கள் பெற்றிட உரிய விழிப்பு ணர்வு நடவடிக்கைகளை மேற்  கொள்ள வலியுறுத்தி  2010 இல்  அப்போதைய மாற்றுத்திறனாளி கள் நலத்துறை அரசு செயலாளர்,  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்  கும் கடிதம் எழுதினார்.  எனினும்,  இந்த அரசாணைகள் பிறப்பிக்கப் பட்டு பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் மிகப் பெரும்பாலான உயர்கல்வி நிலையங்களில் இந்த அரசாணைகள் அடிப்படையில் கட்டணங்கள் விலக்களிக்கப்படாத அவலம் நீடிக்கிறது.

தலைமைச் செயலாளர் தலையிடுக!
நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள்  கல்லூரி களில் துவங்கப்பட்டுள்ள நிலை யில், இந்த அரசாணைகளை முழுமையாக நடைமுறைக்கு  கொண்டுவர வேண்டும்.   உயர்  கல்வித்துறை, சட்டத்துறை, மருத்து வத்துறை, மீன்வளத்துறை உள்  ளிட்ட பல துறைகள் சம்பந்தப்படு வதால், சம்பந்தப்பட்டத் துறைச் செயலாளர்கள் கூட்டத்தை உடனடி யாகக் கூட்டி செயல்படுத்த சீரிய நட வடிக்கைகளை தலைமைச் செயலா ளர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.  

குறைதீர் அதிகாரி
மாற்றுத்திறனாளிகள் உரிமை கள் சட்டப் பிரிவு-23 இன்படி கல்லூரி கள் உள்ளிட்ட அனைத்து உயர்  கல்வி நிலையங்களிலும் மாற்றுத் திறனாளிகள் குறைகளைத் தீர்க்  கும் வகையில் குறைதீர் அதிகாரி களையும் நியமித்திட தலைமைச் செயலாளர் உத்தரவாதப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.