tamilnadu

img

இன்று முதல் அரையாண்டு விடுமுறை

சென்னை,டிச.22- தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல் பட்டு மாவட்டங்களில் கனமழை பாதிப்பால் தேர்வுகள் தள்ளி வைக்க ப்பட்டது.

இந்த நிலையில், தென் மாவட்டங் களில் வெளுத்து வாங்கிய மழை வெள்ளத்தால் மாணவர்களுக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ள த்தால் வீடுகள் மூழ்கியதால் மாண வர்களின் பாட புத்தகங்கள் சேதம் அடைந்தன.

தூத்துக்குடி, நெல்லை, கன்னி யாகுமரி, தென்காசி மாவட்டங்க ளில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி  வைக்கப்பட்டுள்ளது. இதற்கி டையே மற்ற மாவட்டங்களில் நடை பெற்று வந்த தேர்வுகள் வெள்ளி யன்று முடிகிறது சனிக்கிழமை (டிச.23) முதல்ஜனவரி 1ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரை யாண்டு விடுமுறை விடப்படுகிறது.

மீண்டும் ஜனவரி 2 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்ப டும் என்று கல்வித்துறை தெரிவித் துள்ளது. அரசு, உதவி பெறும் பள்ளி கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு முடிந்து விடுகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் தான் வழக்க மாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடு முறையும் வருகிறது. அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள் ளது.