tamilnadu

குரூப் - 2 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை,ஜன.11- தமிழ்நாட்டில் 6,151 பணியிடங் களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மற்றும் 2 ஏ தேர்வு முடிவு கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதற்கான தேர்வு நடைபெற்றது. முன்னதாக இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் வெளியிட்டிருந்த செய்திக்  குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் உள்ளதாகக் குறிப்பிட்டு வெளியான செய்திகள் குறித்து பின்வரும் விவரங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

15.12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் தேர்வாணையம் ஆண்டு திட்டம், 2023-ஆம் ஆண்டில் 15.03.2023 அன்று மேம்படுத்தப்பட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின் படி 2023-ஆம் ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் (14 தேர்வுகள் நடத்தப் பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் 20 லட்சம்  தேர்வர்கள் (தோராயமாக) கலந்து கொண்டுள்ளனர். தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின் படி தேர்வுகள் நடத்தப்படு வதோடு 32 தேர்வுகளுக்கான (நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட 9 தேர்வுகள் உட்பட) தேர்வு முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்ட முடிவுகளின் படி, தோராயமாக 12,500 தேர்வர்கள் பல்வேறு அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பினை இந்த ஆண்டு பெற்றுள்ளனர். தொகுதி- 2 முதன்மை எழுத்துத்  தேர்வு தொடர்பாக அதிக அளவில்  தேர்வர்களின் விடைத் தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்தா லும், மேலும், ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகள் நடத்த வேண்டிய இருந்தாலும், தொகுதி-ஐஐ முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பான தேர்வு  முடிவுகள் தேர்வாணைய அட்டவணை யில் டிசம்பர் 2023-இல் வெளியிடப்படு வதாக ஏற்கெனவே தற்காலிக தேர்வு  முடிவு அட்டவணை குறித்து அட்டவ ணையில் அறிவிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகளை விரைந்து  வழங்க வேண்டும் என்ற நோக்கத்து டன், தொகுதி-ஐஐ முதன்மை எழுத்துத் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக (விடுமுறை நாட்கள் உட்பட) நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்த வேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.