tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அன்னையர் தினம்: முதல்வர் வாழ்த்து 

சென்னை,மே 12-  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரித்துள்ளார்.

உலக அன்  னையர் தினத்தை யொட்டி முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டுள்ள சமூக வலை தளப் பதிவில், “உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவ ணைக்கும் அன்பின் திருவுரு அம்மா!

தூய்மையான அன்பை மாரியெனப்  பொழியும் தாய்மார்கள் அனைவருக் கும் அன்னையர் நாள் வாழ்த்துகள்!

ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக்  கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்று வோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு
டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை, மே12- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வேளாண்மை விரி வாக்க பணியில் அடங்கிய வேளா ண்மை அலுவலர் (விரிவாக்கம்), வேளாண்மை உதவி இயக்குனர் (விரி வாக்கம்) பதவிகள் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை பணியில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவியில் காலியாக உள்ள 159 பணியிடங்களை நிரப்புவதற்கான கணினி வழித்தேர்வை கடந்த 20.5.2023 மற்றும் 21.5.2023 அன்று நடத்தியது.

தேர்வர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்  விற்கு வேளாண்மை உதவி இயக்கு னர் பதவிக்கு 45 பேர், வேளாண்மை அலுவலர் பதவிக்கு 105 பேர், வேளா ண்மை உதவி இயக்குனர் மற்றும்  வேளாண்மை அலுவலர் பதவிக்கு 4  பேர், தோட்டக்கலை அலுவலர் பத விக்கு 176 பேர் என தேர்வர்களின் பதி வெண்கள் கொண்ட பட்டியல் தேர்வா ணைய வலைத்தளம் www.tnpsc.gov. inல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தக வலை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப் பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரி வித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
சென்னை, மே 12- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்க ளாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து  வரும் நிலையில், 16 ஆம் தேதி வரை  மழை தொடரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மே 16 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மஞ்சள் நிற  எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக் காலில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜாமீனில் வந்தவர் மீண்டும் குற்றம் செய்தால் ஜாமீனை ரத்து செய்திடுக!
போலீஸ் டிஜிபிக்கு அறிவுறுத்தல்

சென்னை, மே 12- ஜாமீனில் வெளிவரும் குற்றவாளி கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடு பட்டால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தமிழக டிஜிபியை அறி வுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்  முகமது ஜின்னா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அனுப்பியுள்ள கடிதம் வரு மாறு:

குற்ற வழக்குகளில் கைதாகி ஜாமீ னில் வெளியே வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால்  அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய சம்  பந்தப்பட்ட அரசு குற்றவியல் வழக்கறி ஞர்களை அணுகி உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாரை அறிவுறுத்த வேண்டும்.

அதேபோல ஜாமீன் வழங்கும்போது விதிக்கப்படும் நிபந்தனைகளை முறை யாக பின்பற்ற தவறுபவர்களின் ஜாமீனை யும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும். கடுமையான குற்றச்சம்பவங் களில் உரிய காலக்கெடுவுக்குள் குற்றப்  பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில், குற்றவாளி கள் எளிதாக ஜாமீன் பெற்று விடுகின்ற னர். இதைத் தடுக்க உரிய காலக்கெடு வுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல சாட்சிகளை கலைப்ப வர்கள், சட்டத்துக்கு புறம்பாக செயல்படு பவர்களின் ஜாமீனையும் ரத்து செய்ய நட வடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோடை மழை  55 சதவீதம் குறைந்தது
சென்னை, மே 12- தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அள விற்கு கோடை வெயில் சுட்டெரித்தது. கடந்த ஒரு  மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத் தால் பெரும் அவதிப்பட்டனர். இயல்பை விட 4, 5  டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கியது. 

குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெயி லின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதற்கிடையில் தமிழகத்தின் ஒரு சில இடங்க ளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து  வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் மார்ச் 1 முதல் மே 12 வரையிலான காலகட்டத்  தில் 38.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. அந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 85.5 மி.மீ ஆகும்.  ஆகவே கோடை மழை இதுவரை இயல்பை விட  55 விழுக்காடு குறைவாக பெய்துள்ளது.